பணிஓய்வு பெறும் தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து


பணிஓய்வு பெறும் தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து
x

இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னை,

தமிழக அரசு தலைமை செயலாளராக செயல்பட்டுவந்த இறையன்பு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அதேபோல, தமிழக டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த சைலேந்திரபாபுவும் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

பணிஓய்வு பெறும் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. இந்த நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்காக இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Next Story