ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு
x

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 18,500 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story