கோவை பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி


கோவை பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி
x

காவல்துறையின் நாய்ப்படையில் உள்ள மோப்ப நாய்களும் கண்காட்சியில் பங்கேற்றன.

கோவை,

கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து வந்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் ராட்வெய்லர், பெல்ஜியம் ஷெப்பர்ட், கிரேட் டேன், ராஜபாளையம், கொம்பை, சிப்பிப்பாறை என பல்வேறு வகையான நாய்கள் கலந்து கொண்டன. மேலும் காவல்துறையின் நாய்ப்படையில் உள்ள மோப்ப நாய்களும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இதே போல பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற ஏராளமான வகைகள் கண்காட்சியில் பங்கேற்றன. இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு நாய்கள் மற்றும் பூனைகளை கண்டுகளித்தனர்.


Next Story