ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு


ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
x

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 6 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.ஜி. பாபு ஐ.பி.எஸ் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பயிற்சி மைய ஏ.ஐ.ஜி யாகவும், செல்வகுமார் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.பி யாக இருந்த ராதாகிருஷ்ணன், சேலம் மாநகர தலைமையிட துணை ஆணையர் பொறுப்பிலும், தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.பி யாகவும், குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பி பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


Next Story