காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் வாலாஜாபாத் வட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை மற்றும ்7-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை, 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களுக்கு காஞ்சீபுரம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், காஞ்சீபுரம் வட்டத்தில் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை மற்றும் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையிலும்,

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை மற்றும் 7-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையிலும்,

குன்றத்தூர் வட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை மற்றும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை காஞ்சீபுரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம்் முன்னதாவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே வருகிற 1-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தீர்வாய நிகழ்ச்சியினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story