"ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது" - அண்ணாமலை


ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது - அண்ணாமலை
x

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, பின்னர் காணொலி வாயிலாக தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பா.ஜ.க. அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

இந்நிலையில் ஜே.பி.நட்டாவின் வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே அண்மைக் காலமாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஜே.பி.நட்டாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது;-

"தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். அவரது வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு, ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story