மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு


மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு
x

சென்னையில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை), காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச்சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் மற்றும் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story