ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
x

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு, ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, காவல் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்த நபரின் எண்ணை வைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், பூக்கடை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டது தெரியவந்ததை அடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story