மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - வைகோ ஆதரவு


மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - வைகோ ஆதரவு
x

கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு சிதைத்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

மாநில உரிமைகளைக் காத்திட மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்படவிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்துள்ளதாகவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து சிதைத்து வருவதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ள போராட்டத்தை ஆதரித்து ம.தி.மு.க நிர்வாகிகள் உரையாற்றுவார்கள் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.




Next Story