வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமான நிலைய தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்


வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமான நிலைய தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
x

வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமான நிலைய தபாலில் வந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தபால் பிரிவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த பார்சலில் பரிசுப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சல் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதில் இருந்த முகவரியை ஆய்வு செய்தனர். அதில் அந்த முகவரி போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் பச்சை நிறத்தில் 250 போதை மாத்திரைகள் மற்றும் 75 போதை ஸ்டாம்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் விலை உயர்ந்தவை. இந்த பார்சலை கேட்டு வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வகை விலையுர்ந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகள் நீண்ட நேரம் போதையில் இருக்க செய்யும். இவற்றை கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்ய தபாலில் கடத்தினார்களா? வெளிநாட்டில் இருந்து இந்த போதை பார்சல் சென்னையில் யாருக்கு கடத்தி வரப்பட்டது? என சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story