கார் மோதி வட மாநில தொழிலாளி பலி


கார் மோதி வட மாநில தொழிலாளி பலி
x

கார் மோதி வட மாநில தொழிலாளி பலியானார்.

கரூர்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜப்ரு மண்டல் (வயது 50). இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சக்திவேல் என்பவரிடம் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே பீகாரை சேர்ந்த கட்டிட வேலை செய்து வரும் தனது நண்பரை பார்க்க ஜப்ரு மண்டல் வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு க.பரமத்தி அருகே உள்ள பவர் கிரிட் எதிரில் உள்ள உணவகத்தில் ஜப்ரு மண்டல் தனது நண்பருடன் சாப்பிட்டு விட்டு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது, போது கரூர் நோக்கி வந்த கார் ஒன்று ஜப்ரு மண்டல் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story