நாடாளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு


நாடாளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
x

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் தொடங்கியது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரம், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

விருப்ப மனுக்கள் விநியோகம் கடந்த 6-ம் தேதியுடன் நிறைவடைந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கும் கால அவகாசமும் அன்றைய தினமே (6-ம் தேதி) நிறைவடைந்தது. அதன்படி தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. இந்த நிலையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற நேர்காணல் தற்போது நிறைவடைந்துள்ளது. 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அ.தி.மு.க. ஆட்சி மன்றகுழு கூட்டம் விரைவில் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story