நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு: பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது ம.தி.மு.க.


நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு: பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது ம.தி.மு.க.
x
தினத்தந்தி 20 Jan 2024 4:23 AM GMT (Updated: 20 Jan 2024 5:10 AM GMT)

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதிமுக சார்பில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு மற்றும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.

1. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்

2. மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர்

3. ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்

4. வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

1. தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர்

2. ஆ.வந்தியத்தேவன் -கழக கொள்கை விளக்க அணி செயலாளர்

3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர்

4. ப.த.ஆசைத்தம்பி - கழக இளைஞரணி செயலாளர்

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story