சென்னையில் இருந்து அந்தமான் சென்ற பயணிகள் விமானம் - மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்டது


சென்னையில் இருந்து அந்தமான் சென்ற பயணிகள் விமானம் - மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்டது
x

விமானம் இன்று காலை சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு நேற்று பகல் 12 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று, 150 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது. அந்தமான் வான் எல்லையை விமானம் கடந்து சென்ற போது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

மேலும் இடி, மின்னலும் அதிகமாக இருந்ததால் தரையிறங்க முடியாமல் விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. வானிலை சீரடையாததால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து அந்தமானில் இருந்து பயணிகள் விமானம் மீண்டும் மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் இன்று(வியாழக்கிழமை) காலை மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமில்லாத பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொண்டனர்.




Next Story