போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை


போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை
x

வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

சென்னை,

போக்சோ சட்ட வழக்குகளில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

அதில், போக்சோ சட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பிய பின்பு மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சிறார்களிடம் நடத்தப்படும் விசாரணைகளை வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


Next Story