சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது


சிவகங்கையில் ரேஷன் பொருட்களை திருடிய சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் கைது
x

தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதிகளில் உள்ள 4 ரேஷன் கடைகளில் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பீகாரைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 டன் அரிசி, 13 டன் குருணை அரிசி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story