மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்


மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
x

கோப்புப்படம்

தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ந் தேதி வெளியிட்டுள்ளது. பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 18-ந் தேதி ஆகும். மறுநாள் (19-ந் தேதி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி. தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் 8 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story