அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப மாணவ-மாணவிகள்


அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப மாணவ-மாணவிகள்
x

அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சிலம்பம் சுற்றினர்.

செங்கல்பட்டு

அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம் சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 100 சிலம்ப மாணவ-மாணவிகள் தங்களது கண்களை கருப்பு துணியில் கட்டிகொண்டு தொடர்ந்து 15 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இதில் கலந்துகொண்ட சிலம்ப மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர்ஆறுமுகம், செந்தூர் பாண்டியன், தினேஷ் அஸ்வின், கனகராசு, கவுதம், பாபு, ரேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story