ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்


ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்
x

சசிகலா நாளை சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில், பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த மாதம் 15, 16-ந்தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் 22-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னை தி-நகர் இல்லத்தில் இருந்து புறப்படும் சசிகலா, கோவை வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறார். மறுநாள் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்கள் ஓய்வில் இருந்த சசிகலா, மீண்டும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.




Next Story