பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 20 Jun 2023 6:15 PM GMT (Updated: 21 Jun 2023 10:37 AM GMT)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் புதுத்தெருவில் வசித்துவரும் மாணிக்கம் என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 48), கட்டிட மேஸ்திரி. இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தார்.


Next Story