மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

சென்னை திருவல்லிக்கேணியில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி. கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது இவர், அந்த பகுதியில் செயல்படாமல் இருந்த கட்டிடத்தில் வைத்து மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சீனிவாசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story