அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம் காளியம்மன் கோவில், ராசாப்பட்டி காளியம்மன் கோவில். ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், கீழராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், கண்மாய்பட்டி காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், உப்புபட்டிகாளியம்மன் கோவில், காக்கிவாடன்பட்டி, எஸ்.ஆர்.காலனி காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல இனாம் மீனாட்சிபுரம் அழகம்மாள் கோவில், மண்குண்டாம்பட்டி கிணற்றடி அம்மன் கோவில், குகன்பாறை காளியம்மன் கோவில், சூரர்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story