ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
x
தினத்தந்தி 9 April 2024 4:00 AM GMT (Updated: 9 April 2024 5:39 AM GMT)

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை கடற்படைக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பினர்.

இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story