சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்


சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்
x

மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.

சென்னை,

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்வதுடன், சில சமயம் மேற்கூரையில் ஏறி அட்டகாசம் செய்வார்கள். அவர்களை போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story