7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
x

கோப்புப்படம்

7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி

* சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

* மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்

* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக என். சுப்பையா நியமனம்

* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் நாத் மீண்டும் நியமனம்

* தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக செந்தில் ராஜ் மீண்டும் நியமனம்

* நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஆணையர் பொறுப்பு

* பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநராக வினித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story