கோவில் திருவிழாவில் வெடி விபத்து: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


கோவில் திருவிழாவில் வெடி விபத்து: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x

திருவள்ளூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் சாதிக் அலி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் மணவாளநகரில் தனது சகோதரர் அப்துல்லா நடத்தி வரும் பட்டாசு உற்பத்தி செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ந்தேதி திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கோவில் நிர்வாகத்தினர் பேரம்பாக்கம் அப்துல்லா என்பவரிடம் பட்டாசு ஆர்டர் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பேரம்பாக்கத்தில் இருந்து பட்டாசுகளை சாதிக் அலியும், அவருடன் மப்பேடு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (55) என்பவரும் எடுத்து கொண்டு திருவிழா நடந்த இடத்திற்கு சென்றனர்.

அப்போது வெடி போட்டபோது எதிர்பாராத விதமாக பட்டாசு மூட்டையில் தீ பொறி பட்டது. இதில் மூட்டையில் இருந்த வெடிகள் பயங்கரமாக வெடித்ததில் சாதிக் அலியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் தீக்காயம் அடைந்தார். அவருடன் நின்றுக்கொண்டிருந்த சிரஞ்சீவிக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதிக் அலி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story