கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!


கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
x
தினத்தந்தி 1 Sep 2022 2:50 AM GMT (Updated: 1 Sep 2022 2:51 AM GMT)

கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story