விபத்தில் காயம் அடைந்தவர் சாவு


விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:30 AM IST (Updated: 23 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிபுலம் பச்சையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் கிருஷ்ணன் (44). விவசாய தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று தென்னம் புலம் கடைத்தெருவில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயேந்திரசரஸ்வதி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story