திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:15 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.81 கோடி கிடைத்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்களில் ரூ.1.81 கோடியும், 1½ கிலோ தங்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் எண்ணும் பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதம் 2 முறை எண்ணப்படும். இந்த மாதத்தில் 2-வது முறையாக கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் நிரந்தர உண்டியல்கள், மேலக்கோபுர திருப்பணி உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல், உபகோவிலான சிவன் கோவில் உண்டியல், வெயிலுகந்தம்மன் கோவில் உண்டியல் போன்றவை எண்ணப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

ரூ.1.81 கோடி

குற்றாலம் உதவி ஆணையர் கண்ணதாசன், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், திருச்செந்தூர் ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் மொத்தம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 85 ஆயிரத்து 296 கிடைத்தது.

மேலும் தங்கம் 1 கிலோ 590 கிராமும், வெள்ளி 32 கிலோ 400 கிராமும், 523 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story