கவர்னர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைப்பு


கவர்னர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 Aug 2023 2:38 PM GMT (Updated: 14 Aug 2023 2:47 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நடைபெறவிருந்தது.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை இரவு தேநீர் விருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்திருந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிக்க விருந்தார்.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நாளை இரவு நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ராஜ்பவனில் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும், நாளையும் மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கவர்னரின் தேநீர் விருந்தில் புறக்கணிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story