பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்


பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்
x

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு தஞ்சையில் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர்

இந்தியா முழுவதும் பணியின் போது உயிர்நீத்த போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு, 3 சுற்றுகளாக 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story