வரலாறு காணாத கனமழை... 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து...!


வரலாறு காணாத கனமழை... 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து...!
x

கோப்புப்படம்

4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிககனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 5 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த தேர்வுகளை மறுதேதியில் நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story