கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்


கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
x
தினத்தந்தி 7 April 2024 3:48 AM GMT (Updated: 7 April 2024 5:47 AM GMT)

உடல் நலக்குறைவு காரணமாக கணவர் கடந்த இருதினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவரது மனைவி ரமாவள்ளி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.

கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story