மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம் தாக்கி பெண் சாவு
x

சாலவாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த உள்ளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 5 வயதில் மகளும் உள்ளனர். நேற்று காலை துர்கா தேவி வீட்டில் தண்ணீரை ஏற்றுவதற்காக மின்மோட்டாரை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

உடனடியாக அவரை வாலாஜாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் துர்கா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story