மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

சென்னை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த புழல் புத்தகரம் சுபாஷ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம்(வயது 39). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
குடும்ப தகராறு காரணமாக லோகேஸ்வரி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆவடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தணிகாசலம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





