துப்பாக்கியுடன் வாலிபர் கைது


துப்பாக்கியுடன் வாலிபர் கைது
x

துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வயலில் துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரி கார்த்திக் தலைமையில் வத்திராயிருப்பு புதுப்பட்டி பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது புதுப்பட்டி அருகே வயலில் வாலிபர் ஒருவர் வனத்துறையினரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேஷபுரத்தை சேர்ந்த அந்தோணி சுரேஷ் (வயது 30) என்பதும், கையில் துப்பாக்கி, தோட்டா, அரிவாள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன் சுரேசையும் வனத்துறையினர் கைது செய்தனர்.


Next Story