பாகிஸ்தான்: ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலி


பாகிஸ்தான்: ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Aug 2023 4:28 AM IST (Updated: 13 Aug 2023 12:45 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலியாகினர்.

பலுசிஸ்தான்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 10-11 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பயங்கரவாதி காயமடைந்தார், மேலும் ஒரு பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது என்று ISPR தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story