தென்கொரியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4.90 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சியோல்,
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்தது.
இந்த நிலையில் தற்போது அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில் தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 881 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியது. அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 4 லட்சத்து 27 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதே போல் 24 மணி நேரத்தில் 291 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 432 ஆக அதிகரித்தது.
Related Tags :
Next Story