உக்ரைனுக்கு மேலும் ரூ. 6 ஆயிரம் கோடி ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 14 April 2022 8:14 AM GMT (Updated: 14 April 2022 8:14 AM GMT)

உக்ரைனுக்கு மேலும் ரூ.6 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.  
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் உக்ரைனுக்கு ஏற்கனவே 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகிறது.

உக்ரைனுக்கு தற்போது அமெரிக்கா வழங்க திட்டமிட்டுள்ள உள்ள ராணுவ உதவிகள் இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து கோடி ரூபாய் ஆகும்.

Next Story