கனடா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி


கனடா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
x

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டாவா,

கனடா நாட்டின் மனிடொபா மாகாணம் வினிப்பெக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டனர். ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story