அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை


அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 March 2024 4:54 AM GMT (Updated: 17 March 2024 8:59 AM GMT)

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், "அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும்" என்றார். ஆனால் எதற்காக இப்படி டிரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில் ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும்போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், தொழில் துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Next Story