பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி..3 பேர் படுகாயம்..!


பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி..3 பேர் படுகாயம்..!
x
தினத்தந்தி 7 Jan 2024 12:06 PM GMT (Updated: 8 Jan 2024 8:04 AM GMT)

இரண்டு வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) கூறுகையில்,

குர்ரம் மாவட்டம் பரசினாரிலிருந்து பெஷாவர் செல்லும் வழியில் இரண்டு வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் பலியான 4 பேரில் 2 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர். குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story