ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி; 4 பேர் காயம்


ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து:  4 பேர் பலி; 4 பேர் காயம்
x

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.


டோக்கியோ,


ஜப்பான் நாட்டின் கோப் நகரில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு தீ அடுத்தடுத்து பரவியுள்ளது.

மொத்தம் 30 அறைகள் கொண்ட முதல் தளத்தில், அறைகள் முழுவதும் கரும்புகை பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் முதல் தளத்தில் வசித்த 8 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து உள்ளனர். 4 பேர் சுயநினைவற்று கிடந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்களும், தினக்கூலி பெறுவோரும் தங்கி இருந்து உள்ளனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story