கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு


கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
x

கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

கிரீஸ்,

ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டு உள்ளது.


Next Story