பாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


பாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 5 Jan 2024 11:43 AM GMT (Updated: 5 Jan 2024 11:48 AM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் குளிர்காலம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடுமையான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலை ஒத்திவைக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாஸா சோலங்கி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அறிவிக்கப்பட்ட தேதியில் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் தற்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story