உக்ரைனில் இரவு முழுவதும் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷிய ராணுவம்


உக்ரைனில் இரவு முழுவதும் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷிய ராணுவம்
x

Image Courtesy : AFP

உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷிய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பெருத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளங்களை குறித்து தாக்குதல் நடத்துவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இருப்பினும் ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் ரஷியா செயல்பட்டு வருகிறது. அவர்களின் திட்டம் பலனளிக்காது. தங்கள் செயல்களுக்கு ரஷியா பதில் சொல்லியே தீர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷிய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு அணுமின் நிலையத்தின் மின்பகிர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story