ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் கவர்னர் பலி..!!


ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் கவர்னர் பலி..!!
x

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் பால்க் மாகாணத்தின் கவர்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காபூல்,

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு பால்க் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் மாகாண கவர்னரான தவுத் முஸ்மல் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். அமைப்புடன் இதற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாகாண கவர்னரே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story