அமெரிக்கா: 3 மகன்களை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் வரும் வரை வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த தந்தை


அமெரிக்கா: 3 மகன்களை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் வரும் வரை வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த தந்தை
x

அமெரிக்காவில் 3 மகன்களை சுட்டுக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தை சேர்ந்தவர் ஷாட் டொர்மென். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது டொர்மென் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன்களை சரமாரியாக சுட்டார். 3 மகன்களையும் (மகன்களின் வயது 3,4 மற்றும் 7) வரிசையாக நிற்க வைத்த டொர்மென் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த டொர்மெனின் மனைவி துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் டொர்மென் சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மகள் வீட்டை விட்டு வேகமாக ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் உதவிகேட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டிற்கு சென்றபோது தாக்குதல் நடத்திய டொர்மென் வீட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனினும் டொர்மெனின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 மகன்களையும் சுட்டுக்கொன்ற டொர்மென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story