இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேட்டி


இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேட்டி
x

image courtesy;AFP

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் இடம்பெற்றுள்ளார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து வழக்கம்போல ஒரு நாள் முன்பாகவே அறிவித்துள்ளது. அதில் கடந்த போட்டியில் அறிமுகமாகி ஓரளவு நன்றாகவே செயல்பட்ட இளம் ஸ்பின்னர் சோயப் பஷீரை அதிரடியாக நீக்கியுள்ள இங்கிலாந்து நிர்வாகம் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இதே ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடியும் அளவுக்கு பிட்ச் பிளாட்டாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அதனால் இப்போதும் அதே போன்ற பிட்ச் இருக்கும் என்று கருதி மார்க் வுட்டை அணிக்குள் கொண்டு வருவதாக கூறியுள்ள அவர் இது பற்றி போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு;-

"இங்கு நாங்கள் விளையாடிய கடந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சில பாடங்களையும் தகவல்களையும் எடுத்துள்ளோம். அப்போட்டி நீண்ட காலத்திற்கு முன்பாக நடந்தாலும் பிட்ச் பிளாட்டாக இருந்தது என்பது உண்மையாகும். அதே பிட்ச்சை இன்று நான் பார்த்தபோது மீண்டும் நன்றாக தெரிந்தது. எனவே ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை இந்த முறை நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த வாரம் எங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் நாங்கள் போட்டிக்கு செல்ல உள்ளோம்" என்று கூறினார்.


Next Story