கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத்...துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன் - வைரலாகும் வீடியோ


கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத்...துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன் - வைரலாகும் வீடியோ
x

Image Courtesy: X (Twitter)

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 77 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஷ்வர் குமார் வீசிய அந்த பந்தில் ரோவ்மன் பவல் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற்ற உடன் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story